"வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
குரூப்
இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. அப்போது, தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:
இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம் அழைக்கப்படுவர். " ரேங்க்" அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி. ஏ. ஓ., பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30 ல் வெளியானது.
இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.