அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள், மூன்று மாணவிகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரப்பினர் வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள், இரண்டு மாணவிகள் என மொத்தம் 10 மாணவ, மாணவியரை தேர்வு செயது அவர்கள் விரும்புகின்ற தமிழகத்திலுள்ள சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்த்து மேல்நிலைக் கல்வி பெற அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உதவிபெறும் மாணவ, மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண்டுக்கு 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல், இரண்டாண்டுகளுக்கு 56 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.தகுதியுடைய மாணவ, மாணவியர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்