அதிக கோடை வெயிலின் காரணமாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு: தமிழக அரசு
தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிக கோடை வெயிலின் காரணமாக தற்போது அனைத்து விதமான பள்ளிகளும் அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளின் கோடை விடுமுறையை மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்து தமிழக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 3ம் தேதிக்கு பதில் ஜூன் 10ம் தேதியன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் கடுமை தொடர்வதால் விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.