நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இட மாறுதல் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று துவங்குவதாக அறிவிப்பு.
பஞ்சாயத்து யூனியன், நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கும் . இன்று (28ம் தேதி) காலை, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு ஆணை வழங்குதல், மதியம், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது. நாளை காலை, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல், மதியம், துவக்கப்பள்ளி தலைமையாசிர்களுக்கு மாறுதல் ஆணை வழங்குதல் ஒன்றியத்துக்குள் நடக்கிறது.மே 30ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியத்துக்குள்ளும், மதியம், இடைநிலை ஆசிரியர் மாறுதல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விட்டு மாவட்டத்திற்குள்ளும் நடக்கிறது. 31ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடக்கிறது.