முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி.

எதிர்பார்த்து காத்திருந்த சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு முடிவுகள் ஒருவழியாக இன்று வெளியிடப்பட்டது. தென்மண்டலத்தில்தேர்வு எழுதியவர்களில் 98.87 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி நடந்தது. முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள்எதிர்பார்த்து காத்திருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.results.nic.in, www.cbseresults.nic.in, and www.cbse.nic.inஎன்ற இணைய தளத்தில் காணலாம். இந்தியா முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ளனர்.