முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மாணவ–மாணவிகளுக்கு லேப்–டாப் வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தகவல்

      பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் 65–வது கல்வி மாநாடு ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
.பள்ளிக்கூட மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு லேப்–டாப் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ரூ.1,000 கோடி நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கினார். ஆனால் இந்த ஆண்டு கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் லேப்–டாப் வழங்குவதற்காக ரூ.1,500 கோடியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கி உள்ளார்.
இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் பேசினார்.