முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கலெக்டர்களுக்கு முதல்வர் விருது

முதல்வர் தனிப்பிரிவு மனுக்களை சிறப்பாக கையாண்ட வகையில், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர் கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா விருதுகள் வழங்கினார். சென்னை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது.

இம்மாநாட்டின் முடிவில், சிறப்பாக செயல்பட்ட, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு விருதுகள் வழங்கினார். முதல்வர் தனிப்பிரிவு மனுக்களை சிறப்பு மனுக்களை கையாண்டது

கலெக்டர்:

பரிசு பெயர் மாவட்டம்
முதல் ஜெயஸ்ரீமுரளிதரன் திருச்சி
முதல் தாரிஸ் அகமது பெரம்பலூர்
முதல் நடராஜன் திருவாரூர்
2வது அன்சுல் மிஸ்ரா மதுரை
2 வது ஜெகநாதன் நாமக்கல்
3 வது சமயமூர்த்தி நெல்லை
3வது பாஸ்கரன் தஞ்சை

எஸ்.பி.,க்கள்

முதல் சேவியர் தன்ராஜ் திருவாரூர்
2வது கண்ணம்மாள் நாமக்கல்
3வது பாஸ்கரன் விழுப்புரம்

மாநகர கமிஷனர்

முதல் சஞ்சய் மாத்தூர் மதுரை மாநகர்

துறை தலைவர்கள்

பரிசு பெயர் துறை
முதல் பங்கஜ் குமார் பன்சல் தமிழ்நாடு சுகாதார திட்டங்கள்
2வது சந்திரமோகன் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
3வது விக்ரம் கபூர் சென்னை மாநகராட்சி

மேலும், சுகாதாரத்துறையின் கீழ், மாற்றுத்திறனாளிகள், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டங்களின் கீழும் மாவட்ட கலெக்டர்களான தாரீஸ் அகமது- பெரம்பலூர், அனுஜார்ஜ்- அரியலூர், நாகராஜன்- கன்னியாகுமரி,ஜெயஸ்ரீ-திருச்சி, மகரபூஷணம்- சேலம், ஷோபனா- கரூர், மகேஷ்வரன்- கிருஷ்ணகிரி, முனுசாமி- நாகை, லில்லி- தர்மபுரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.