முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

பள்ளி பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து: அரசு எச்சரிக்கை

பாடப் புத்தகங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று சில்லரை விற்பனையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு பாடநூல் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:நடப்பு கல்வியாண்டில் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையானஇலவச மற்றும் விற்பனை பாடப் புத்தகங்கள் பள்ளிகள் திறக்கப்படும் முன்பே அச்சடித்து விநியோகம் செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இப்போது இறுதி கட்டமாக பிளஸ் 1 வகுப்பு இலவச பாட நூல்கள் அச்சகங்களில் இருந்து நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு மாணவர்களுக்கு உடனடியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான விற்பனை பாட நூல்கள் ஜூன் 14-ம் தேதி முதல் சென்னை தரமணியில் உள்ள தலைமை பாடநூல் கிடங்கில் இருந்து சென்னை மாவட்ட பள்ளிகளுக்கும், ஜூன் 18-ம் தேதி முதல் பாடநூல்கள் சில்லரை விற்பனையாளர்களுக்கும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள இதர 21 பாடநூல் கழக வட்டார அலுவலகங்களிலும் பள்ளிகள் மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.