முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் படுமா?

2013-2014 ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கை "கொள்கை குறிப்பில்" (Policy Note) பக்கம் 137,138ல் 546 நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட மத்திய அரசு பரிசீலிக்காத போதும் 100 விழுக்காடு அருகாமையினை (access) உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இருப்பினும் 546 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது. இதற்கான முயற்சிகள் வரும் ஆண்டுகளில் படிப்படியாக மேற்கொள்ளப்பட உள்ளது.  இதையடுத்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக   தரம் உயர்த்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.