முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

கணிதப் பாடத்தில் ’சென்டம்’ கடும் வீழ்ச்சி


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி, கணிதப்பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளது.
கடந்தாண்டு 12 ஆயிரத்து 532 பேர் நூறு சதவீத மதிப்பெண் எடுத்திருந்தனர். ஆனால், சமச்சீர் கல்வி  திட்டத்தில், இந்தாண்டு ஆயிரத்து 141 பேர் மட்டுமே கணிதப்பாடத்தில் நூறு சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.
‘புத்தகத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன, என்றபோதிலும் ஒரு மதிப்பெண் பிரிவில் கேள்விகள் கேட்கப்பட்ட விதம் சற்று கடினமாக அமைந்திருந்ததே முழு மதிப்பெண் பெற முடியாததற்கு முக்கிய காரணம்’ என்று மாணவ, மாணவிகள் தெரிவிக்கின்றனர்.