முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
Mahatma Gandhi
 

காந்தி ஜெயந்தி

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சைக்கிள் பேரணி, காந்தி கண்காட்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் காந்தி ஜெயந்தி என்பதால், நாளை காலை ஆளுநர் ரோசய்யா மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
காலை 10.15 மணிக்கு மெரினா கடற்கரை அருகே உலக அமைதியை வலியுறுத்தும் மிதிவண்டிப் பேரணியும், 11.30 மணிக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் கண்காட்சித் திறப்பு விழாவும் நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில், காந்தியடிகளின் 144வது பிறந்த நாள் விழா ஆளுநர் ரோசய்யா தலைமையில் நடைபெற உள்ளது.