முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண்  72 ரத்து செய்யப்பட்டுள்ளது. 
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.  3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

பணியாளர் நியமனத்துக்கான புதிய விதிமுறைகளையும் ஐகோர்ட் வெளியிட்டது.புதிய விதிமுறையின் கீழ் இரண்டு மாதத்தில் பணி நியமனம் செய்யவு
ம்  உத்தரவிட்டுள்ளது.