முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

மாணவர்களுக்கு கல்விஉதவி தொகை ரூ.500-ஆக உயர்வு


 தொழிற்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 
[Press Release No.553] ( On Incentives to ITI students )          
   இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, அரசு தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு அம்மாணவர்களுக்கு இது வரை வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையினை ஒரே சீராக ரூ.500-ஆக உயர்த்தியுள்ளதாகவும், இதற்காக அரசு ரூ.12.94 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளாதகவும், மாணவர்களுக்கு விலையில்லா ‌லேப்டாப் வழங்க ரூ.3.47 கோடி ஒதுக்கியிருப்பதாகவும், இந்த புதிய அறிவிப்பின் மூலம் 3,476 மாணவர்கள் பயன் அடைவர் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது