முக்கிய செய்திகள்

இன்றைய குறள்: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. Eng:An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings. மு.வ உரை: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.Explanation :G.U.Pop:He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.

அனைத்து வகைப்பள்ளிகளும் 20.09.2012 இன்று வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு...


தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்: 05224/கெ2/2012, நாள் : 18.09.2012
அரசு கடித எண் : 32194/இ1/2012-1 - நாள் : 17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் 20.09.2012 அன்று அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. 

>பள்ளிக்கல்வித்துறையின்  (தனியார் மெட்ரிக் / அரசு  மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள்) கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவனைபடியே தேர்வு நடைபெறும் என்றும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு .

>தொடக்கப்பள்ளித்துறை (தனியார்/அரசு தொடக்க/நடுநிலைப்பள்ளிகள்) கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவனைபடியே தேர்வு நடைபெறும் என்றும் தொடக்கப்பள்ளித்துறை அறிவிப்பு .
    தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.


   ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முடிவு எடுக்கவில்லை எனவும், விடுமுறை தொடர்பான அறிவிப்பு தவறாக வெளியாகியுள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலையில் மறுப்பு தெரிவித்தனர்.